Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வள்ளலார் தைப்பூசம் மந்தை கருப்புசாமி கோயிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம் முடிந்தும் தொடரும் பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
தைப்பூசம் முடிந்தும் தொடரும் பாத யாத்திரை

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
04:01

பல்லடம்: பழனியில், தைப்பூச விழா நிறைவடைந்த பின்னும், பக்தர்கள் பலர் தொடர்ந்து பாத யாத்திரை சென்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் பழனியில் நடைபெறும் தைப்பூச விழாவுக்கு, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர், பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசு கோவில்களை திறக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, முக்கிய விசேஷ தினங்கள், மற்றும் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு, ஜன., 18 அன்று நடந்த தைப்பூச விழாவுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பல லட்சக்கணக்கான பக்தர்கள், பழனியில் குவிந்தனர். இச்சூழலில், தைப்பூசம் முடிந்த பின்னும் தொடர்ந்து பக்தர்கள் பலர் பாதை யாத்திரை சென்று வருகின்றனர். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, தினசரி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகின்றனர். அரசு விதித்த கட்டுப்பாடுகளும், ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடியதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar