திருக்கனுார்: சோம்பட்டு பவழங்குடி சித்தர் ஜீவ சமாதியில் குருபூஜை விழா நடந்தது.திருக்கனூர் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழங்குடி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இங்கு 215ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று முன்தினம் நடந்தது.காலை 8:00 மணி முதல்கால யாக வேள்வி, அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் உட்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தார்.