Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேரன்மகாதேவியில் சிறப்பு பூஜை கதிர்காமம் கோவிலில் நாளை செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடையத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி, சுவாமி சிலைகள்
எழுத்தின் அளவு:
கடையத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி, சுவாமி சிலைகள்

பதிவு செய்த நாள்

03 பிப்
2022
06:02

கடையம்: கடையத்தில் குப்பைகளை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் முதுமக்கள் தாழி, சுவாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் அகழாய்வு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கடையம் ஜம்புநதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்.,சிற்கு சொந்தமான  குப்பை சேமிப்பு கிடங்கில், குப்பைகளை கொட்டுவதற்காக ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன. அப்போது முதுமக்கள் தாழிகள், ப ழங்கால ஓடுகள், சுவாமி சிலைகள் கிடைத்தன. இந்த தகவல் தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான ஆய்வு மேற் கொண்டால் கீழடியை போன்றே பழங்கால தமிழர்களின் வரலாறு வெ ளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஜம்புநதியும், ராமநதியும் ராமாயண புராணத்துடன் தொடர் புடையது. தசரதர், பாப விமோசனத்திற்காக வில்வவனநாதர்–நித்யகல்யாணி அம்பாளை வழிபட்டுள்ளார். பழங்காலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்த பகுதியாகவும், முற்காலத்தில் விக்கிரமபாண் டியநல்லூர் என்றழைக்கப்பட்ட கடையம்பகுதியில் ஆற்றங்கரை தொல்குடி நாகரீகம் இருந்ததாகவும் பலதரப்பட்ட தகவல்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாண்டிக்கோவை என்ற நூலில் கூட கடையம் குறிக்கப்பட்டு உள்ளது. அந்நூல், இந்த ஊரை கடையல் என்று குறிப்பிடுகிறது. கடையம் என்ற ஊரை சேரர்களும்பாண்டியர்களும் ஆட்சி செ ய்திருக்கிறார்கள். சுந்தரபாண்டியனின் ஆட்சி கல்வெட்டில் இவ்வூரை கோநாடு விக்கிரபாண்டியநல்லூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜடா வர்மன் ஸ்ரீவல்லபனின் 18ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும் கடையத்தை குறிப்பிடுவதால் இவ்வூரில் பழங்கால நாகரீகம் இருந்தது உறுதியாகிறது. கீழடியை தாண்டிய பொக்கிஷங்கள் கடையத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில்

உள்ளன என்பது சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின்  கருத்தாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar