Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேரன்மகாதேவியில் சிறப்பு பூஜை கதிர்காமம் கோவிலில் நாளை செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடையத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி, சுவாமி சிலைகள்
எழுத்தின் அளவு:
கடையத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி, சுவாமி சிலைகள்

பதிவு செய்த நாள்

03 பிப்
2022
06:02

கடையம்: கடையத்தில் குப்பைகளை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் முதுமக்கள் தாழி, சுவாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் அகழாய்வு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கடையம் ஜம்புநதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்.,சிற்கு சொந்தமான  குப்பை சேமிப்பு கிடங்கில், குப்பைகளை கொட்டுவதற்காக ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன. அப்போது முதுமக்கள் தாழிகள், ப ழங்கால ஓடுகள், சுவாமி சிலைகள் கிடைத்தன. இந்த தகவல் தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான ஆய்வு மேற் கொண்டால் கீழடியை போன்றே பழங்கால தமிழர்களின் வரலாறு வெ ளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஜம்புநதியும், ராமநதியும் ராமாயண புராணத்துடன் தொடர் புடையது. தசரதர், பாப விமோசனத்திற்காக வில்வவனநாதர்–நித்யகல்யாணி அம்பாளை வழிபட்டுள்ளார். பழங்காலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்த பகுதியாகவும், முற்காலத்தில் விக்கிரமபாண் டியநல்லூர் என்றழைக்கப்பட்ட கடையம்பகுதியில் ஆற்றங்கரை தொல்குடி நாகரீகம் இருந்ததாகவும் பலதரப்பட்ட தகவல்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாண்டிக்கோவை என்ற நூலில் கூட கடையம் குறிக்கப்பட்டு உள்ளது. அந்நூல், இந்த ஊரை கடையல் என்று குறிப்பிடுகிறது. கடையம் என்ற ஊரை சேரர்களும்பாண்டியர்களும் ஆட்சி செ ய்திருக்கிறார்கள். சுந்தரபாண்டியனின் ஆட்சி கல்வெட்டில் இவ்வூரை கோநாடு விக்கிரபாண்டியநல்லூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜடா வர்மன் ஸ்ரீவல்லபனின் 18ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும் கடையத்தை குறிப்பிடுவதால் இவ்வூரில் பழங்கால நாகரீகம் இருந்தது உறுதியாகிறது. கீழடியை தாண்டிய பொக்கிஷங்கள் கடையத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில்

உள்ளன என்பது சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின்  கருத்தாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar