திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2012 10:07
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில், ரூ. 90 லட்ச ரூபாய் செலவில் கும்பாபிஷேக பணிகளை தேவஸ்தான நிர்வாகம் துவக்கியுள்ளது.ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முதல் கட்டப் பணியாக, கோபுரங்களில் சாரம் கட்டும் பணி துவங்கியுள்ளது. சேதமடைந்துள்ள கோபுரங்களில் உள்ள சுதைகளை புதுப்பித்து, வர்ணம் பூசப்படுகிறது. மயில் மண்டபத்தை சுற்றி, சுமார் 16 லட்ச ரூபாய் செலவில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட உள்ளது. கோயிலின் மேல்தளத்தில் சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் தட்டோடு பதிக்கப்படுகிறது. சனீஸ்வரர் சன்னதி மேல் கோபுரம் மிகவும் சிதைந்துள்ளது. புதிதாக சுதைகளுடன் கோபுரம் கட்டப்பட உள்ளது. அனைத்து மண்டபங்களிலும் உள்ள ஓவியங்கள், சிலைகள் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் வர்ணம் பூசப்பட உள்ளது. தைப்பூசத்திற்கு முன்னதாக பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.