பதிவு செய்த நாள்
20
ஜூலை
2012
10:07
சென்னை: தமிழக சுற்றுலாத் துறையின், 108 அம்மன் கோவில் சுற்றுலாத் திட்டத்தை, அமைச்சர் கோகுல இந்திரா நேற்று துவக்கி வைத்தார்.தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில், 108 அம்மன் கோவில் சுற்றுலா, இந்த ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. ஆடி மாதத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை, 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இரவு, 9 மணிக்கு சென்னை வந்தடையும்.ஐந்து நாட்களிலும், வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சுற்றுலா செல்வதற்கு நபருக்கு, 4,300 ரூபாயும், சிறுவருக்கு, 3,700 ரூபாயும், தனி அறை வசதியுடன் தங்குவற்கு நபருக்கு, 5,300 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இச்சுற்றுலாவை, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுலஇந்திரா நேற்று துவக்கி வைத்தார்.சக்தி சுற்றுலா: இதில், மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஊர்களில் உள்ள, அம்மன் கோவில்களுக்கு சென்று வரலாம். சென்னையிலிருந்து காலை, 7 மணிக்கு பஸ் புறப்பட்டு மாலை, 7 மணிக்கு வந்தடையும். நபருக்கு, 470 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.மூன்று தேவியர் சுற்றுலா: மீஞ்சூர் திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயல் கொடியிடையம்மன் கோவில்களை தரிசிக்கலாம். இதற்கு நபருக்கு, 375 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சென்னையிலிருந்து காலை, 8 மணிக்கு புறப்பட்டு, மாலை, 5 மணிக்கு வந்தடையும்.