பதிவு செய்த நாள்
20
ஜூலை
2012
10:07
தர்மபுரி: மேல்மருவத்தூரில் நாளை (21ம் தேதி) நடக்கும் ஆடிப்பூர விழாவில் கலந்து கொள்ள, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் செல்கின்றனர். இது குறித்து ஓம்சக்தி ராஜா மணி வெளியிட்ட அறிக்கை:மேல்மருவத்தூர் சுயம்பு ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில், 41ம் ஆண்டு ஆடிப்பூர விழா நாளை துவங்குகிறது. துவக்க விழாவுக்கு, கோவை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட தலைவர் சஸ்வதி சதாசிவம் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார்.காலை 8.30 மணிக்கு அடிகளார் வரவேற்பும், பாத பூஜையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கலச விளக்கு பூஜையும், 22ம் தேதி சிறப்பு அபிஷேகம், கஞ்சி வரவேற்பும், காலை 9.15 மணிக்கு கஞ்சி வார்த்தல், மதியம் சுயம்பு அன்னைக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. 23ம் தேதி அன்னதானம் நடக்கிறது.ஆடிப்பூர விழாவில் பங்கேற்பதற்காக, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் செல்கின்றனர். மேலும், கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட ஆன்மீக மன்றத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.