திருப்பூர் கொங்கு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2026 12:04
திருப்பூர்: திருப்பூர் கே.பி.என். காலனியில், ஓம் சக்தி நகர், அமர்ஜோதி கார்டன், அண்ணா நகர், வி.கே.ஆர். தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட கொங்கு விநாயகர் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்தி ஓராண்டாகிறது. முதலாமாண்டு விழா சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. நேற்று காலை கணபதி ேஹாமத்துடன் ஆண்டு விழா பூஜை துவங்கியது. அதையடுத்து கொங்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.