விளாத்திகுளம் பத்திரகாளியம்மன் கோயிலில் ஆனிப் பொங்கல் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2012 10:07
விளாத்திகுளம்: விளாத்திகுளம் பத்திரகாளியம்மன் கோயில் ஆனிப்பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் ஆனிப்பொங்கல் விழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனிப்பொங்கல் விழா ஐந்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருவிழா சந்தன காப்பு அலங்காரம் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம் சிறப்பு பூஜையும் நடந்தது. மூன்றாம் திருவிழா அன்று 108 திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து வான வேடிக்கையுடன் அம்மன் பாலகர்கள் ஆற்றுக்குச் சென்று புனித நீர் எடுத்து வருதல் நடந்தது. அதனை தொடர்ந்து அம்மன் பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து வீதி உலா நடந்தது. நான்காம் திருவிழா அன்று சிறுவர் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஐந்தாம் திருநாளன்று மாலை 3 மணிக்கு மஞ்சல் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து சென்டை மேளம் சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் முளைப்பாறி ஊர்வலம் நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த திருவிழாவில் பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, அசத்தப் போவது யாரு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விளாத்திகுளம் இந்து நாடார் உறவின் முறை சங்கத்தலைவர் கருப்பசாமி நாடார், செயலாளர் புதுராஜா, பொருளாளர் பன்னீர் செல்வம், துணைத்தலைவர் நட்டார்முத்து நாடார், துணைசெயளாளர் செல்லைய நாடார் சென்னை வாழ் விளாத்திகுளம் இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் ராமு நாடார், ஜெயராஜ் நாடார், சின்னச்சாமி நாடார் தண்காசல பாண்டி நாடார், முனியசாமி நாடார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயில் பூஜை கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.