ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்திவிரத தினத்தை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவர் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, தரிசனம் செய்தனர்.