சின்னமனூர்: சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக இன்று காலை திருக்கல்யாணம், நாளை மாலை தேரோட்டமும் நடைபெறுகிறது.
சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலின் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு கடந்த ஏப். 7 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இன்று ( ஏப்.14) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் பூலாநந்தீஸ்வரருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை ( ஏப்.15 ) மாலை 5 மணிக்கு திருத்தோரட்டம் நடைபெறும். இரண்டு நாள் நடைபெறும் இந்த தேரோட்டத்தை காண சின்னமனூர் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வருவார்கள்.