Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமஅழகர் கோயில் சித்திரை ... உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: அசைந்தாடி வந்த தேர் உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியும் - அரனும் ஒரே நேரத்தில் காட்சி: பக்தர்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
அரியும் - அரனும் ஒரே நேரத்தில் காட்சி: பக்தர்கள் பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2022
08:04

பொன்னேரி: பொன்னேரி, திருவாயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, இம்மாதம், 16ம் தேதி துவங்கியது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் காலையில், நாச்சியார் திருக்கோவில், மாலை, ஊஞ்சல் சேவை ஆகிய உற்சவங்கள் நடந்தன.பொன்னேரி அகத்தீஸ்வர பெருமானும், கரிகிருஷ்ண பெருமானும் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் சந்திப்பு திருவிழா, நேற்று முன்தினம், நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கியது.கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள், தேரடியில் நிலை கொண்டார். மறுமுனையில் பஞ்ச மூர்த்திகளுடன் சேஷ வாகனத்தில் வந்த அகத்தீஸ்வரர் காட்சியளித்தார்.ஆனந்தவல்லி தாயார், சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை பாலசுப்ரமணியன் ஆகியோர் தனித்தனி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீற்றிருந்தனர். வாண வேடிக்கைகள் விண்ணை பிளந்தன.அகத்தீஸ்வரர் மற்றும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு தாம்பூலங்கள், மாலைகள் மங்கள இசையுடன் மாற்றப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டன.பின், நேற்று, அதிகாலை 5:45 மணிக்கு, அகத்தீஸ்வரர், கரிகிருஷ்ண பெருமாள் ஆகியோர், ஒரே சமயத்தில் எழுந்தருளினர். பஜார் வீதி கோதண்ட ராமன் சன்னதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் அரி - அரன் சந்தித்தனர்.அரியும், அரனும் ஒரே இடத்தில் சந்தித்தபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணா என கோஷங்களை எழுப்பினர்.அகத்தீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும், கரிகிருஷ்ண பெருமாளும் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சந்திப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஈஸ்வரனையும், பெருமாளையும் ஒரே இடத்தில் வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மாசி மக தீர்த்தவாரியில், தந்தைக்கு, அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமகமும், ஆண்டுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (12ம் தேதி) குண்டம் திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் - மாசிமகத்தையொட்டி கும்பகோணம், சக்கரபாணி கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar