Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித செபஸ்தியார் திருவிழா ... நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் திட்டம் பழநியில் துவக்கம் நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2022
04:04

வடவள்ளி: கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, வடபழனி முருகன் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், பழனி, திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட 10 கோவில்களில், நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கோவை மாவட்ட இணை ஆணையர் செந்தில் வேலவன், அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்
,"மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இனி நாள்தோறும் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம், கற்கண்டு சாதம், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் மற்ற நாட்களை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூடுதலாக பிரசாதம் வழங்கப்படும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar