திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 27ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பூவோடு போடுதல், கருட கம்பம் நடுதல். சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு சீர் கொண்டு வருதலும், 5:30 மணிக்கு முத்து மாரியம்மன், மாகாளியம்மன் தெய்வங்களுக்கு திருக்கல்யாணமும் நடந்தன. இதையடுத்து மாவிளக்கு எடுத்து வருதல், சிறப்பு பூஜையும், மதியம் உச்சிகால பூஜை, பொங்கல் வைத்தலும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று தெய்வங்களை வழிபட்டு சென்றனர். இன்று காலை முளைப்பாரி எடுத்து வருதலும், மாலை அம்மன் திருவீதி உலாவுடன் மஞ்சள் நீராட்டும் நடக்கின்றன. நிறைவு நாளான நாளை காலை, 10:00 மணிக்கு மறுபூஜை அபிஷேக ஆராதனையுடன் விழா நிறைவடைகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.