Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உயிர் தியாகம் செய்ய தயங்க மாட்டோம்..: ... திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் இசைப் பயிற்சி முகாம் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2022
05:05

மதுக்கரை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில், 200 ஆண்டுகட்கும் மேல் பழமையான மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில், மரப்பாலம் - செட்டிபாளையம் சாலையில், தனியார் கல்லூரி அருகேயுள்ள, 7.63 ஏக்கர் நிலமும் அடங்கும்.

இதனை கடந்த, 20 ஆண்டுகட்கும் மேலாக, மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்த, முத்துவேலப்பன், சாமிநாதன் சகோதரர்கள் குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தனர். இருவரையும் நிலத்தை ஒப்படைக்க கோவில் செயல் அலுவலர் மூன்றாண்டுகட்கு முன் அறிவுறுத்தினார். நிலத்தை ஒப்படைக்க மறுத்ததால், அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று காலை அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில், மதுக்கரை வருவாய் ஆய்வாளர் ஜெயகவுசல்யா, வி.ஏ.ஓ., பாலதுரைசாமி, கோவில் செயல் அலுவலர் சரண்யா முன்னிலையில் நிலத்திலிருந்த வீடு, மாட்டு கொட்டகை பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாயாகும். காலை, 11:00 மணிக்கு துவங்கிய பணி மாலை, 3:30 மணிக்கு. முடிவுக்கு வந்தது. அளவு கற்கள் நடப்பட்டு, நிலம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என, அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. போலீஸ் எஸ். ஐ., குப்புராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இக்கோவிலுக்கு சொந்தமான மேலும் பல ஏக்கர் நிலங்கள், மிக குறைந்த குத்தகையில் பலரது கட்டுப்பாட்டில் உள்ளன. இவைகளையும் மீட்டு கோவில் வருவாயை அதிகரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar