திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சுவாமி புஷ்பபல்லாக்கு வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2022 09:06
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாயொட்டி புஷ்பபல்லாக்கு வீதியுலா நடந்தது.
காரைக்கால் மாவட்ட திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 20ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது.பின் பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், கடந்த 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும்,நேற்று முன்தினம் இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. நேற்று செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும்,வரும் 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும்.9ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.10ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது.11ம்தேதி தெப்போற்சவம்,12ம் தேதி பஞ்சமுர்த்திகள் திருவீதியுலா விசாக தீர்த்தம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்.கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை சிறப்பாக நடைபெற்றது.