Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழர் கால உமாமகேஸ்வரர் கோயிலில் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2022
05:06

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திருமணத்தடை நீக்க சுயம் வரா பார்வதி யாகம் நடைபெற்றது. சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம்ரோடு கொருமடுவு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 26ஆவது ஆண்டுவிழா மற்றும் திருமணத்தடை நீக்கும் மாபெரும் யாகம் நேற்று நடைபெற்றது.


இன்று காலை 8மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது. பால தண்டாயுதபாணியை வணங்கினர்.அதை தொடர்ந்து நவக்கிரக ஆலயத்தை சுற்றி விட்டு யாக குண்டத்தில் நவதானியங்களை தலையை சுற்றி போட்டனர். ஆண்கள் வாழை மரத்திற்கும், பெண்கள் பாலை மரத்திற்கும்  மாலை அணிவித்து மாங்கல்ய தோஷத்தை நீக்கினர். அனைவரும் கருந்துளசி, தொட்டாசிணுங்கி மூலிகை செடிகளுக்கு குங்குமம் மஞ்சளிட்டு வணங்கி ராகு, கேது தோஷம், சனிதோஷம், நவக்கிரகதோஷம், மாங்கல்ய தோஷம், உள்ளிட்ட தோஷங்கள் நீங்க சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்பு மதியம் 12.30க்கு மகாபூர்ணாகுதி பூஜையும்,1மணிக்கு பார்வதி பரமேஷ்வரனுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. யாகத்தில் ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து திருமணமாகாத ஆண்கள், பெண்கள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனிச்சாமி தலைமையில் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.பாதுகாப்பு பணியில் பங்களாபுதுார் போலீசார் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar