Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழர் கால உமாமகேஸ்வரர் கோயிலில் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2022
05:06

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திருமணத்தடை நீக்க சுயம் வரா பார்வதி யாகம் நடைபெற்றது. சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம்ரோடு கொருமடுவு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 26ஆவது ஆண்டுவிழா மற்றும் திருமணத்தடை நீக்கும் மாபெரும் யாகம் நேற்று நடைபெற்றது.


இன்று காலை 8மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது. பால தண்டாயுதபாணியை வணங்கினர்.அதை தொடர்ந்து நவக்கிரக ஆலயத்தை சுற்றி விட்டு யாக குண்டத்தில் நவதானியங்களை தலையை சுற்றி போட்டனர். ஆண்கள் வாழை மரத்திற்கும், பெண்கள் பாலை மரத்திற்கும்  மாலை அணிவித்து மாங்கல்ய தோஷத்தை நீக்கினர். அனைவரும் கருந்துளசி, தொட்டாசிணுங்கி மூலிகை செடிகளுக்கு குங்குமம் மஞ்சளிட்டு வணங்கி ராகு, கேது தோஷம், சனிதோஷம், நவக்கிரகதோஷம், மாங்கல்ய தோஷம், உள்ளிட்ட தோஷங்கள் நீங்க சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்பு மதியம் 12.30க்கு மகாபூர்ணாகுதி பூஜையும்,1மணிக்கு பார்வதி பரமேஷ்வரனுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. யாகத்தில் ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து திருமணமாகாத ஆண்கள், பெண்கள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனிச்சாமி தலைமையில் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.பாதுகாப்பு பணியில் பங்களாபுதுார் போலீசார் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar