Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு ... திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் மஹா தரிசன நிகழ்ச்சி : சுவாமி வீதி உலா திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டுக்கு முந்தைய வரலாற்று சுவடு! மண்ணோடு மண்ணாக கிடக்கும் பரிதாபம்
எழுத்தின் அளவு:
200 ஆண்டுக்கு முந்தைய வரலாற்று சுவடு! மண்ணோடு மண்ணாக கிடக்கும் பரிதாபம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2022
03:06

அவிநாசி:  அவிநாசியில், 200 ஆண்டுக்கு முந்தைய வரலாற்று சுவடு, மண்ணோடு மண்ணாக கிடக்கிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியின் பல கிராமங்களில், பல ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளும், வரலாற்று சின்னங்களும் உள்ளன. இதில், அவிநாசி கோவை பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தின் மூலையில், மண்ணோடு மண்ணாக, 200 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், அக்காலத்தில் நிறுவப்படும் துாண்களின் மேல் வைக்கப்படும், வேலைபாடு நிறைந்த ‘போதிகை எனப்படும் கல்லும் கிடக்கின்றன. அங்கு ஒரு மைல் கல்லும் உள்ளது. சங்க காலத்தில், க என்ற எண் ஒன்று, உ என்பது, எண் இரண்டு, என்ற வகையில் தமிழ் எழுத்துக்கள் மூலமே எண்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அங்குள்ள மைல் கல்லில், கருத்தம்பட்டி, 9 மைல், செங்கப்பள்ளி, 11 மைல், அன்னுார், 12 மைல் என, குறிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது; கடந்த, 200 ஆண்டுக்கு முன், வியாபாரம் செய்ய பல இடங்களுக்கு செல்லும் வணிகர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே மடங்களும், அவர்கள் செல்லுமிடம் அறிந்துக் கொள்ள மைல் கற்களும் வைக்கப்பட்டிருந்தன. அவிநாசியில், வரலாற்று சுவடு உள்ள இடமும், அந்த வகையிலானது தான்.  அந்த மைல் கல்லில் குறிப்பிட்டுள்ளபடி, கருமத்தம்பட்டி வழியாக கோவை, பாலக்காடு, அன்னூர் வழியாக, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூரு, செங்கப்பள்ளி வழியாக ஈரோடு, சென்னை என பெருவழிகளை குறிக்கும் வகையில் தான், கல்வெட்டில் மைல் குறிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷார் காலத்து மைல் கல்லில் கூட தமிழ் எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது, கூடுதல் சிறப்பு. மடத்தில் வைக்கப்பட்ட துாணின் மேல் உள்ள போதிகையும், பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற வரலாற்று சுவடுகள் குறித்து, இளைய தலைமுறையினருக்கு விளக்க வேண்டும். இத்தகைய எண்ணற்ற வரலாற்று சின்னங்களை பாதுகாக்க திருப்பூரில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar