சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோவில் ஆனித் திருவிழா தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சாத்துாரப்பன் என அழைக்கப்படும் சாத்தூர் வெங்கடாஜலபதி ஆனி திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல்காரணமாக நடைபெறவில்லை. கொரோனா அச்சுறுத்தல் நீங்கிய நிலையில் ஆனித் திருவிழா ஜூலை 5 கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பெருமாள் பல்லக்கு, சிறி கருடவாகனம், பெரியகருடவாகனம், அனுமந்த் வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோரோட்டம் இன்று நடந்தது. காலை 7:00 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராய் பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாமதமாகவந்ததால் 11:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அணைக்கரை பட்டி கிராமத்தினர் தேருக்குதடி போட்டனர். சாத்துார் பொதுமக்கள் சறுக்குகட்டை கொடுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர் பகல் 2:00 மணிக்கு நிலையை அடைந்தது.