சிவகங்கை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 68-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறபப்பாக நடைபெற்று வருகிறது. விழாவைத் தொடா்ந்து, தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்நது. முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் திருவிழா இன்று (ஜூலை 15 ம் தேதி) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் வளாகமே பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.