உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வடக்குப்புற வளாகத்தில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த இலந்தை மரம் உள்ளது.
இந்த இலந்தை மரத்தின் அடியில் மகாபாரதத்தை இயற்றிய வியாசர் முனிவரின் பாதுகை உள்ளது. ஆனி பவுர்ணமி மற்றும் குருபூர்ணிமாவை முன்னிட்டு இலந்தை மரத்துக்கும், வியாசர் பாதுகைக்கும் 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பானக்கம், நீர்மோர், வெள்ளரிக்காய், பச்சை பயிறு ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.