சாத்துார்: சாத்துார் சடையம்பட்டி சீரடி சாய்பாபா கோவிலில் பெளர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா விழா நடந்தது. உலக மக்கள் நலனுக்காக சிறப்பு யாகம் நடந்தது. சீரடி சாய்பாபா விற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பெண்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்தனர். சாய்பாபா நாமம் போற்றி பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பலர் விழாவில் கலந்து கொண்டனர்.