தேவிபட்டினம்: தேவிபட்டினம் சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோவிலில், பௌர்ணமி மாத அகல் தீப விளக்கு வழிபாடு நடைபெற்றது. அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மலர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மாங்கல்ய பூஜையும், குங்கும அர்ச்சனையும், நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு, மலர் அலங்காரத்தில் மூலவர் பக்தருக்கு அருள் அளித்தார். அழகன்குளம் அழகியநாயகி அம்மன் மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா குழுவினர், பூஜைகளை செய்தனர். நடைபெற்ற சிறப்பு பூஜையில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.