தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் மாணவ மாணவிகள் பாத பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2022 07:07
தஞ்சாவூர் : பெற்றோரைப் போற்றி வணங்கும் வகையில் கஞ்சனூர், சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் மாணவ மாணவிகள் தங்களது தாய் தந்தையருக்குப் பாத பூஜை செய்து சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவாமி விமூர்த்தானந்தர், பெற்றோர்களின் கடமை, குழந்தைகள் -பெற்றோர் இணக்கமான உறவு, பெற்றோர் குழந்தைகளை எப்படி நடத்தினால் அவர்கள் கடைசி வரை சிறந்த பிள்ளைகளாக விளங்குவார்கள் என்பது பற்றி உரை நிகழ்த்தினார். சுவாமி விவேகானந்தர் 125 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உரையாற்றிய அதே இடத்தில் ரூபாய் 10 லட்சம் செலவில் அவருக்கு ஆளுயர வெண்கலச் சிலை ஒன்று வைக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி டவுன்ஹாலில் மாலை 4.30 முதல் 8.30 வரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. 15.8.22 அன்று பிற்பகல் ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் சிறப்புரைகள், கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜின் திவ்ய நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெறும்.