Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ... சவுந்திரவள்ளி சமேத சோமேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரவநல்லூர் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
11:08

வீரவநல்லூர்: வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோயிலில் பக்தி பெருக்குடன் பக்தர்கள் நேற்று பூக்குழி இறங்கிய நிகழ்ச்சியை திரளான மக்கள் கண்டுகளித்தனர். வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடி மகோத்சவ பூக்குழி திருவிழா இந்த ஆண்டும் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார தீபாராதனையும், மகாபாரத உபன்யாசமும், இரவு சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது. விழாவின் சிறப்பு நாளான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலையில் பால்குடம் வீதியுலாவும், மதியம் அபிஷேகமும், தொடர்ந்து பூ வளர்க்கும் இடத்தில் அக்னியை காவல்புரியும் தெய்வமான வீரபுத்திர சுவாமியை கன்னி மூலையிலும், ஈசான மூலையிலும் வைத்தனர். தொடர்ந்து கரகம் எடுப்பவர் கோயில் ஹோமகுண்டத்தில் உள்ள பூவை இரு கைகளாலும் அள்ளி துணியில் போட்டு சுற்றி, பிரகாரத்தை வலம் வந்து பூ வளர்க்கும் இடத்தில் கொட்ட "கோவிந்தா என்ற கோஷம் முழங்க பூ வளர்க்கப்பட்டது.தொடர்ந்து சங்கிலிபூதத்தாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி மஞ்சள் ஆடை அணிந்து அக்னி குண்டத்தை வலம் வந்து முடிக்க "கோவிந்தா என்ற கோஷம் முழங்க குந்தம்மாதேவியும் கரகமும் முதலில் பூ இறங்க தொடர்ந்து பக்தர்களும் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர்.மெய்சிலிர்க்க வைத்த இந்த காட்சியை திரளான மக்கள் கண்டுகளித்தனர். வெளியூரில் இருந்தும் ஏராளமான மக்கள் பூக்குழி விழாவை காண வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வீரவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சோபாஜெம்சி செய்திருந்தனர். சுகாதார வசதிகளை டவுன் பஞ்., நிர்வாகம் செய்திருந்தது.இன்று (11ம் தேதி) தீர்த்தவாரியும், வரும் 15ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அக்தார் பாபநாசம் மற்றும் விழாக் கமிட்டியார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar