Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியபாளையத்து அம்மனுக்கு ... திரவுபதி அம்மன் கோவில் விழா காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் இரவில் கனமழை; பாதுகாப்பாக பக்தர்கள் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2022
04:07

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பெய்த கனமழையினால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு, நேற்று அதிகாலை வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக மலை அடிவாரத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த ஜூலை 25 முதல் இன்று வரை சுவாமி தரிசனம் செய்ய விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து தினமும் அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி நேற்று முன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நிலையில், பெரும்பாலான பக்தர்கள் இரவு 7:00 மணிக்குள் மீண்டும் மலையடிவாரம் திரும்பினர். மதிய நேரத்தில் மலையேறிய பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இரவு 7:30 மணிக்கு மேல் சதுரகிரி வனப் பகுதியில் பலத்த சாரல் மழை பெய்ய துவங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த சாரல் மழையினால் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை உட்பட பல்வேறு நீர்வரத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலில் இருந்து இரவு 7:00 மணிக்கு மேல், கீழிறங்கியவர்கள் ஆங்காங்கே வழித்தட பாதையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வனத்துறை மற்றும் தீயணைப்பு துணையினர் கண்காணித்து வந்தனர். கோயிலிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படாமல் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை 07:30 மணிக்கு ஓடைகளில் நீர்வரத்து குறைந்த நிலையில், கோயில் மற்றும் வழித்தடப்பாதையில் தங்கி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தாணிப்பாறை மலை அடிவாரம் அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்த சுமார் 4000 மேற்பட்ட பக்தர்கள், காலை 8 40 மணிக்கு மேல் தான் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.‌ சாமி தரிசனம் செய்த உடன் தாமதமின்றி கீழிறங்க அறிவுறுத்தப்பட்டனர். கடந்த ஐந்து நாட்களாக தினமும் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருவதால், தானிப்பறையில் இருந்து கோயில் வரையுள்ள வழித்தட பாதையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓடை யில நீர் வரத்தைப் பொறுத்தே இன்று (ஜூலை 30) பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar