பதிவு செய்த நாள்
12
ஆக
2022
12:08
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்குள் வெயில் நேரங்களில், நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களின் கால்களை, வெப்பம் தாக்குவதில் இருந்து பாதுகாக்கும் விதமாக நடைமேடையில் நவபாஷாண ஊழியர்கள் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.
தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், கல்வி, ஆயுள், சிறக்க பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருவதால், கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களுக்கு செல்லும் நடைமேடையில், பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்கள் சூடு ஏறி, வெப்பமாக உள்ளன. இதனால், பக்தர்களின் கால்களை வெப்பம் பதம் பார்க்க கூடும் என்பதால், நவபாஷாணத்தை நிர்வகித்து வரும், இந்து அறநிலை துறை சார்பில், ஊழியர்கள் பகல் நேரங்களில், நடைமேடையில் தண்ணீரை தெளித்து சூட்டை தணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி நடைபாதை வழியாக கடல் பகுதிக்கு சென்று வந்தனர்.