Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேசிய கொடி அலங்காரத்தில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானைகள் தினம்: திருக்கடையூர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
யானைகள் தினம்: திருக்கடையூர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

12 ஆக
2022
04:08

மயிலாடுதுறை: யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் காலசம்ஹார மூர்த்திதனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மார்க்கண்டேயனுக்காக சுவாமி எமனை சம்ஹாரம் செய்த தலமாதலால் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. யானைகள் தினத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள 18 வயதுடைய யானை. அபிராமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மகேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான்சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யானை அபிராமிக்கு சிறப்பு கஜ பூஜையை செய்தார், அப்போது வஸ்த்திரம், மாலை அணிவிக்கப்பட்டு  தீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து யானை அபிராமிக்கு காய்கறிகள் பழவகைகள் உணவாக வழங்கப்பட்டது.  தொடர்ந்து தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஆடி மாத கடைசி  வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலில்  அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார் அப்போது சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலசம்ஹாரமூர்த்தி வெண்பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்திலும், அம்பாள் நவரத்தின அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை திருமடத்தில் தலைமை கண்காணிப்பாளர் மணி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar