Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் ஆவணி திருவிழா ... வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு வீரபத்திர சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி ஞாயிறு: நாகராஜா கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்
எழுத்தின் அளவு:
ஆவணி ஞாயிறு: நாகராஜா கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

பதிவு செய்த நாள்

20 ஆக
2022
09:08

நாகர்கோவில்: ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகராஜா கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.


குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை மிக விசேஷமான நாளாகும். இந்த நாளில் நாகராஜாவை வழிபட்டால் நாகதோஷம் நீங்குவதுடன், திருமணதடை நீங்கும் என்பது ஐதீகம். மேலும், சரும நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை நிகழ்வதால் ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் இக்கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நாகராஜா கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.


நாளை ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதையொட்டி, அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் நாகராஜா கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அன்றைய தினம் அதிகாலை4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன . நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெறுகிறது. மேலும், மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கம்புகள் கொண்டு ஒருவர் பின் ஒருவராக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்ட்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, கழிவரை வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில், ரூ.400க்கு பிரசாத பை ஆவணி ஞாயிற்று க்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஒரு லிட்டர் பால் பாயாசத்துடன் தேங்காய் பழம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar