பதிவு செய்த நாள்
23
ஆக
2022
04:08
நத்தம், நத்தம் அரசு போக்குவரத்து பனிமனையில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, நவகிரக ஹோமம், கணபதி ஹோமம், பூர்ணாவதி, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கடஸ்தாபனம் விசேஷ திரவிய ஹோமம், மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று நாடி சந்தானம், கோ பூஜை, கஜ பூஜை என இரண்டு கால யாக பூஜைகள் நடந்தது. முன்னதாக பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் யாக சாலை மற்றும் கோவிலை சுற்றி வந்த கோவிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு மேளதாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டது. பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன், கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அனைத்து பணியாளர்களும் செய்திருந்தனர்.