Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் கலைநயத்தோடு ... சபரிமலையில் ஓணம் திருவிழா : சன்னிதானத்தில் மெகா அத்தப் பூக்கோலம் சபரிமலையில் ஓணம் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 செப்
2022
01:09

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணை மேலகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பூமிநீளா பெருந்தேவிநாயிகா சமேத வரதராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி பூர்வாங்க பூஜையும், 6ம் தேதி காலை முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை 3ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. அதனை அடுத்து வரதராஜ பட்டர் தலைமையிலானோர் பெருமாள் மற்றும் தாயார் சன்னதி விமான கலசங்களுக்கு புனித நீரூற்றி மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சந்தனம் பூசி மாலை அணிவிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. அதனை அடுத்து பெருமாள்,  தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். மாலை கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்த சீதாராமன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar