திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசி அடுத்த கூழமந்தல் பகுதியில் உள்ள பேசும் பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பேசும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னிட்டு,திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயணன் பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.