Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளலாரின் 200 வது அவதார தின விழா ... ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் விஜயதசமி வழிபாடு ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

05 அக்
2022
01:10

கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை ராஜ வீதி, ஆர்ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் குறிப்பிட்ட( தேவாங்கர்) சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் கத்தி போடும் திருவிழா நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி நவராத்திரி விழாக்காலம் தொடங்கியது. அன்றிலிருந்து விரதம் இருந்து, 10-ம் நாளான விஜயதசமி அன்று பாராக் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்கள் வழக்கம். அந்த வகையில் ,இன்று கத்தி போடும் பாராக் கத்தி திருவிழா ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆர்.எஸ்.புரத்தில் காலை 5.30 மணிக்கு தொடங்கிய வழிபாடு நடத்தப்பட்ட கலசத்துடன் தொடங்கிய ஊர்வலம் காலை 9 மணிக்கு ராஜ வீதி ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலை வந்தடைந்தது. இதேபோல சாய்பாபாகாலனி நெசவாளர் காலனியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஊர்வலம், காலை 11 மணியளவில் ஆர்.ஜி.வீதி புது செளடம்மன் கோயிலை வந்தடைந்தது. இந்த இரு ஊர்வலங்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது இரு கைகளிலும் கத்தியால் கீறி, ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மனை துதித்து ஆடிப்பாடி ‘வேஸ்கோ, தீஸ்கோ’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் கத்தி போட்டுக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar