பதிவு செய்த நாள்
18
அக்
2022
06:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐப்பசி மாத முதல்நாள் தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடக்கம் திரளான பக்தர்கள் காவிரியில் புனிதநீராடினர்.
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான புண்ணியநதிகள் ஐப்பசி மாதத்தில் வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக ஐதீகம். இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நகிழ்ச்சி நடைபெறும். அதேபோல் இவ்வாண்டு ஐப்பசி மாதமுதல் நாளான இன்று முதல்நாள் தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனத்திற்குசொந்தமான அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம்ஆதீனத்திற்குn சாந்தமான விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசிவிஸ்வநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி ஆகியவை பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இருக்கரைகளிலும் எழுந்தருள தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம்கொடுக்க தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம், சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை சிவகுருநாததம்பிரான் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் காவிரியில் புனிதநீராடினர். தொடர்ந்து இருகரைகளிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் அன்பேசிவம் அறக்கட்டளை பாலச்சந்திரசிவாச்சாரியார், நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார் கவுன்சிலர்கள் ரமேஷ், ரிஷி,கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.