Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கிரகணம் : ராமேஸ்வரத்தில் ... பிரத்தியங்கரா கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் பிரத்தியங்கரா கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமாவாசை தீர்த்தவாரி: துலா கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
அமாவாசை தீர்த்தவாரி: துலா கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

26 அக்
2022
10:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியின் போது தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி, சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்ம வனம் என்ற மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருவம் கொண்டு இருவரும் ஆனந்த நடனம் மாயூர தாண்டவம் ஆடினர். பிரம்மா ஸ்தபித்த இந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறியது. அதனை கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் மயில் உருவு நீங்கி தேவியாக சுய உருவம் பெற்றாள். சிவமயிலும் சிவபெருமானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கௌரி ஆகிய நான் மயில் உரு கொண்டு பூஜித்ததால் கௌரி மாயூரம் என்று இந்த ஊருக்கு பெயர் வழங்க வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாளிக்க வேண்டும் என்று வேண்டினால் என்பது ஐதீகம். இதனை நிறைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடந்து வருகிறது. இவ்விழா கடந்த ஐப்பசி 1ம் தேதி முதல் உலா உற்சவம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான அமாவாசை தீர்த்தவாரி விழா நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசி விஸ்வநாதர், வதானேஸ்வரர் கோவிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காவிரி கரைக்கு எழுந்தருளினார். அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சார சுவாமிகள் மேதா தக்ஷிணாமூர்த்திக்கு பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து காவிரியின் இரு கரைகளிலும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி தீர்த்தம் கொடுக்க தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் உட்பட திரளான பக்தர்கள் துலா கட்ட காவிரியில் புனித நீராடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar