Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி ... திருச்செந்துாரில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் திருச்செந்துாரில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூ புத்தரி அறுவடை திருவிழா: பழங்குடி மக்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பூ புத்தரி அறுவடை திருவிழா: பழங்குடி மக்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

28 அக்
2022
08:10

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் நடந்த, பூ புத்தரி அறுவடை திருவிழாவில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான, பனியர் சமுதாய மக்கள் ஆண்டுதோறும் பூ புத்தரி எனப்படும் நெல் அறுவடை திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஐப்பசி மாதம் 10 நாட்கள் விரதம் இருந்து நெல் அறுவடை செய்வார்கள். பந்தலூர் அருகே பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில், சந்திரன் என்பவர் 10 நாட்கள் விரதம் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், கேரளா மாநிலம் ஆலத்தூர் என்ற இடத்தில், உள்ள வயலுக்கு பழங்குடியின மக்கள் மற்றும் குந்தலாடி பகவதி அம்மன் கோவில் நிர்வாகிகள் இணைந்து சென்று, இறைவனை வழிபட்டு பின்னர் முதிர்ந்த நெல் கதிர்களை அறுவடை செய்து, பழங்குடியின மக்களின் வாத்திய இசையுடன் பொன்னானி மகாவிஷ்ணு கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் குருக்கள் சதீஷ் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குந்தலாடி, பெக்கி, ஏலமன்னா உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு , நெற்கதிர், அரச இலைகளை வழங்கிய பின்னர் பொதுமக்களுக்கு இவற்றை பிரசாதமாக வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பழங்குடியினர் சங்க நிர்வாகிகள் வேலன், குமரன், செங்குட்டுவன், பகவதி அம்மன் கோவில் கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயபிரகாஷ், துணைச் செயலாளர் பாபு உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர்  கோவிலில் நடந்த சித்திரை பெருவிழா கொடியேற்றத்தில் திரளான ... மேலும்
 
temple news
பிரான்மலை; பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் பாலமுருகன் திருக்கோவில் மற்றும் நவகிரகங்களுக்கு மகா ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar