Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்கத்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கந்தசஷ்டி விழா: மலைக்கோயிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பழநி கந்தசஷ்டி விழா: மலைக்கோயிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

31 அக்
2022
09:10

பழநி: பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பழநி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா அக்.25., துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் அக்.,30.,ல் மலைக்கோயிலில் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்று, மாலை கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று (அக்.,31.,ல்) மலைக் கோயிலில் குருக்கள், அமிர்தலிங்கம், செல்வ சுப்ரமணியம் குழுவினர் விநாயகர் பூஜை செய்து யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரில் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு, அபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 10:14 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யதாரணம், நடைபெற்றது. திருக்கல்யாணம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நடைபெற்றது. மலர் மாலை மாற்றுதல் நடைபெற்றது. திருமண கோலத்தில் சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தருக்கு திருமண கோலத்துடன் சுவாமி அருள்பாலித்தார். திருக்கல்யாணத்திற்கு பின் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி பிரசாதமாக மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. அதன்பின் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், கோயில் இணை கமிஷனர் நடராஜன், துணை கமிஷனர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar