Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலூர் சித்தி விநாயகர் கோவிலில் ... அண்ணாமலையார் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா அண்ணாமலையார் விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவன் பெட்டியில் இளநீர், ஈக்குமாறு வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவன் பெட்டியில் இளநீர், ஈக்குமாறு வைத்து பூஜை

பதிவு செய்த நாள்

11 நவ
2022
06:11

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர், ஈக்குமாறு வைத்து பூஜை செய்யப்படுவதால் தென்னை விவசாயம் மேம்படும் என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியர் கோவிலில்ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.  பக்தர்கள் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி, அதுதொடர்பான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்க சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ போட்டு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால், ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படும். அதன்படி கடந்த அக்., 6 முதல், வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முத்துார், மங்களப்பட்டி அடுத்த கருந்தேவி கவுண்டன்புதுாரை சேர்ந்த, பக்தர் குமாரசாமி கனவில் இளநீர், ஈக்குமாறு (துடைப்பம்) வைத்து பூஜை செய்யும் படி உத்தரவானது. அதன்படி, பூ போட்டு கேட்டபின், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் இளநீர், ஈக்குமாறு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், ‘சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இளநீர், ஈக்குமாறு வைக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் அதன் தாக்கம் போக போக தெரியவரும்’ என்றார். பக்தர்கள் கூறுகையில், ‘தென்னை உற்பத்தி அதிகரித்து கொப்பரை, தேங்காய் உள்ளிட்டவை விலை சரிந்து வருகிறது. சிவன்மலை உத்தரவு பெட்டியில் இளநீரும், ஈக்குமாறும் உத்தரவாகியுள்ளதால், தென்னை விவசாயம் மேம்பட்டு அதன் பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar