Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கையம்மன் கோவில் விமான கலசங்கள் ... திருமலையில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் 13ல் வெளியீடு திருமலையில் ரூ.300 விரைவு தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனார் கோவிலுக்கு செல்ல நிலம் வழங்கிய இஸ்லாமியர்
எழுத்தின் அளவு:
அய்யனார் கோவிலுக்கு செல்ல நிலம் வழங்கிய இஸ்லாமியர்

பதிவு செய்த நாள்

11 டிச
2022
12:12

கீழக்கரை: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல பாதை வழங்கிய தினமலர் நாளிதழின், 60 ஆண்டு கால வாசகரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த விவசாயி முகம்மது சுஐபு, 75. இவர் இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் உள்ள பொன்னு சிறையெடுத்த அய்யனார் கோவிலுக்கு செல்லும் பிரதான பாதைக்காக, தன் நன்செய் நிலத்தில், 8 சென்ட் இடத்தை தானமாக வழங்கினார்.இதே போல, காஞ்சிரங்குடி, பக்கீரப்பா தர்காவில் இருந்து கடற்கரை ஓரமாக கிழக்கு முத்தரையர் நகர் செல்லும் தார் சாலைக்காக, தன்னுடைய புன்செய் நிலத்தில் இருந்து, 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.தற்போது அந்த சாலையில் கீழக்கரையில் இருந்து முத்தரையர் நகர் வரை டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ஹிந்து கோவில் மற்றும் பொதுமக்களின் பொது பாதைக்காக தன் நிலத்தை தானமாக வழங்கிய இவரின் செயல் அப்பகுதி மக்களால் பாராட்டப்படுகிறது.முகம்மது சுஐபு கூறியதாவது: கோவில் பாதைக்காக என் நிலத்தை தானமாக வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கி வருகின்றனர்.நான், 60 ஆண்டுகளாக தினமலரின் தீவிர வாசகராக உள்ளேன். தினமலர் நாளிதழின் செய்திகளை அன்றாடம் படிப்பது என் வாடிக்கை. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாம் ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar