Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதையம்மன் கோவிலை ... பூண்டியில் மரியாள் பிறப்பு பெருவிழா குடந்தை ஆயர் கொடியேற்றி துவக்கம்! பூண்டியில் மரியாள் பிறப்பு பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் திருமஞ்சன உலா: தினமும் நடத்த நடவடிக்கை அவசியம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 செப்
2012
10:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தினமும் நடக்கும், திருமஞ்சன உலாவை தினமும் நடத்த, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் கோயிலில் தினமும் காலை 7.30 மணிக்கு நடைபெறும் விளா பூஜையில், ராமநாதசுவாமிக்கு கோடி தீர்த்தத்தால், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதற்காக, வெள்ளிக்குடத்தில் சேரிக்கப்படும் கோடி தீர்த்தம், மேளதாளத்துடன், ஆலவட்டம் அலங்காரத்துடன், யானையின் மீது வைத்து, நான்கு ரதவீதியில் ஊர்வலமாக எடுத்து வருவர். பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். மழை காலங்களில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்து, அபிஷேக ஆராதனைகள் செய்வதும் வழக்கம். நேற்று நாதஸ்வர வித்வான் வராததால், திருமஞ்சன வீதிஉலா நடைபெறாமல், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளிக்குடத்தில் தீர்த்தம் சேகரித்து, யானையின் மீது அமர்ந்து வருபவர் வராமல் போவது, ஆலவட்டம் எடுத்து வரும் ஊழியர்கள் வரமறுப்பது, மேளம் வாசிப்பவர்கள் விடுப்பில் செல்வது ஆகிய காரணங்களால், மாதத்தில் பல நாட்கள் திருமஞ்சன உலா நடைபெறுவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். யானை வரமுடியாத நிலையில் கூட, நான்கு ரத வீதியில் கோடி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்து வந்தது. இந்நிலை மாறி, தற்போது திருமஞ்சன உலாவே, அவ்வப்போது நிறுத்தப்படும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க, தினமும், முறையாக திருமஞ்சன உலா, விளா பூஜைகள் நடத்திய பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar