அசுவினி: எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய அசுவினி நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் கேது சப்தம ஸ்தானத்தில் குருவின் சாரம் பெற்றிருக்கிறார். மேலும் ராசிநாதன் செவ்வாய் தனவாக்கு ஸ்தானத்தில் மிக பலமாக சஞ்சரிக்கிறார். பல வகையிலும் நற்பலன் நடக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். லாபஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் மனதில் சுயநம்பிக்கை அதிகரிக்கும். ராசியில் இருக்கும் ராகு எந்த விஷயத்தில் அவசரத்தை கொடுப்பார். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருந்த பிணக்குகள் விலகும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் நல்ல மாற்றங்கள் வரும்.. கெட்டகனவு தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பர். மனதில் நிலையான எண்ணம் வரும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகம் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினர் மனத்துணிவுடன் செயல்படுவர். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகள் இடமாற்றம், பதவி இறக்கம் சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு செலவு உண்டாகும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்தோறும் விரதம் இருந்து முருகனை வணங்க தடை நீங்கும்.
சந்திராஷ்டமம்: பிப்.13
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 5, 6
பரணி: வெள்ளை உள்ளம் கொண்ட பரணி நட்சத்திரஅன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் சுக்கிரன் குருவின் சாரத்தில் பயணிக்கிறார். இம்மாதம் விரைய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். காரிய தடை அகலும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரவுதிருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். ராசியில் இருக்கும் ராகுவாலும் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் நட்சத்திரநாதன் சுக்கிரனாலும் வெளிநாடு வாய்ப்புகள் கை கூடி வரும். குடும்பம் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஐந்தாமிடம் பலம் பெறுவதால் பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகம் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை துாக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கலைத்துறையினர் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை நெய்வேத்யம் செய்து அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரவுஇருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: பிப். 13, 14
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 6
கார்த்திகை - 1: எந்த விஷயத்தையும் நன்மை தீமை அறிந்து முடிவெடுக்கும் கிருத்திகை நட்சத்திரஅன்பர்களே, இந்த மாதம் நட்சத்திரநாதன் சூரியன் செவ்வாய் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். மிக அருமையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவுஅதிகரிக்கும். வீண் அலைச்சல் அகலும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். குடும்பம் அமைதி ஏற்படும். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனியால் தொழில் வியாபாரம் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகம் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம். பெண்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் கிடைக்கும். சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். கலைத்துறையினர் இந்த மாதம் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கலாம். பேச்சில் கவனமுடன் இருப்பது அவசியம். தெளிவான சிந்தனை உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சில பொறுப்புகளை ஏற்று முடிக்க வேண்டிய சூழலைச் சந்திக்க வேண்டி வரும். இதன் மூலம் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 14, 15
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 7
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »