கார்த்திகை - 2, 3, 4: சிக்கனத்தை கடைபிடிப்பவரான கிருத்திகை நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் நட்சத்திரநாதன் சூர்யன் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் சாரம் பெறுகிறார். ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். ஒன்பதாமிடத்தில் புதன் சனி கூட்டணி அமைந்திருக்கிறது. தந்தை மூலம் செலவு உண்டாகலாம். தொழில் ஸ்தானம் மிக வலுவாக அமைந்திருக்கிறது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனை சரியாகும். வீடு மண் மனை யோகம் காணப்படும். வாகனப் ப்ராப்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: தினமும் குலதெய்வத்தை வணங்க வாழ்வு வளம் பெறும். சந்திராஷ்டமம்: பிப். 14, 15 அதிர்ஷ்ட தினம்: மார்ச் 7
ரோகிணி: பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்யும் குணமுடைய ரோகிணி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ராசியில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு உச்சநிலையில் இருக்கிறார். எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரவுஅதிகரிக்கும். புத்தி சாதுர்யம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பம் சந்தோஷமாக இருக்கும். மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர் கருத்துக்களை ஏற்க முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரவு திருப்தி தரும். எதிர்ப்பு குறையும். பெண்கள் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்னைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை துாண்டுவதாக இருக்கும். கலைத்துறையினர் பணவரவு இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் நடக்கும். கட்சி மேலிடத்தில் இருந்து சில முக்கிய செய்திகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: அம்மனை வணங்க குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 15, 16
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 08
மிருகசீரிடம் - 1, 2: எதைக் கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நட்சத்திரநாதன் செவ்வாய் ராசியில் சுயசாரம் பெற்று சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். மனக்கவலை அகலும். எதிர்பாராத செலவு நீங்கும். முயற்சிகளில் தடை விலகும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தியான நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானம் மிக வலுவாக இருப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்டியை சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். பழைய பாக்கி வசூலாகும். எதிர்பார்த்த நிதிஉதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். பணியாளர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். பெண்கள் எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். கலைத்துறையினர் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மை தரும். அரசியல்வாதிகள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்கள் தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
பரிகாரம்: சிவன் வழிபாட்டால் மனோபலம் கூடும்.
சந்திராஷ்டமம்: பிப். 16, 17
அதிர்ஷ்ட தினம்: மார்ச் 9
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »