Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ... மூணாறில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை மூணாறில் இருந்து பழநிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணறு துார்வாரும் போது பெண் தெய்வ சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
கிணறு துார்வாரும் போது பெண் தெய்வ சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

04 மார்
2023
01:03

உத்திரமேரூர்: களியாம்பூண்டி ஏரியில், கிணற்று துார்வாரும் பணியின் போது, நேற்று பெண் தெய்வ சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களியாம்பூண்டி கிராமம். இக்கிராமத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் வளர்த்து வருவாய் ஈட்டும் பணி மேற்கொள்கின்றனர். இதற்காக, களியாம்பூண்டி ஏரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தீவனப் பயிர் பாசனத்திற்காக, அப்பகுதி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்டுள்ள கிணற்றில் நேற்று துார்வாரும் பணி நடந்தது. அப்போது, சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பெண் தெய்வ கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை மீட்டு, உத்திரமேரூர் கருவூலத்திற்கு எடுத்து சென்றனர். இச்சிலை குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதவன் கூறியதாவது: களியாம்பூண்டியில் கண்டெடுக்கப்பட்டு உள்ள பெண் தெய்வ சிலை, மிகப் பழமையானதாக தெரியவில்லை. சமீப காலத்தை சேர்ந்ததாக அறிய முடிகிறது. பெண் தெய்வம் ஒன்று பீடத்தின் மீது, வலது காலை மடக்கியும், இடது காலை தொங்க விட்டும் அமர்ந்துள்ளதாக உள்ளது. தலையில் கிரீடம், காது மற்றும் கழுத்தில் அணிகலன்கள், மார்பில் கச்சை, கைவலை மற்றும் அழகிய ஆடையில் அலங்காரத்தோடு காணப்படுகிறது. வலது கையில் தாமரை மலர் போன்ற ஒன்றை ஏந்தியும், இடக்கை தொடை மீது வைத்து, கட்டை விரல் முனையும், ஆள்காட்டி விரல் முனையும் இணைந்து, மற்ற மூன்று விரல்கள் அருள்பாலிப்பது போலவும் உள்ளது. சிலை அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. முழுமையான ஆய்வுக்கு பிறகுதான் இச்சிலை குறித்த முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar