அலங்காநல்லூர்: பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வெற்றிபெற அலங்காநல்லூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் உள்ள ஹயக்ரீவர், சரஸ்வதிதேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக புனிதநீர் குடங்களுக்கு தீபாராதனை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியும், பூர்ணாதி பூஜை வழிபாடு செய்தனர். பள்ளி, கல்லுரரி மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது பேனா மாலை அணிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் செய்திருந்தார்.