Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் ... பழமையான மகாதேவர் கருவறை சிவலிங்கம் மீது அருவியாக கொட்டிய தண்ணீர் : பக்தர்கள் பரவசம் பழமையான மகாதேவர் கருவறை சிவலிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் பங்குனி தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் பங்குனி தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 மார்
2023
09:03

கொல்லங்கோடு: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பரணி தூக்க திருவிழா நேற்று (16ம் தேதி) இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. குழந்தை வரம் மற்றும் குழந்தைகள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ அம்மனை வேண்டி 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை விரதமிருக்கும் தூக்கக்காரர்கள் மூலம் ரதத்தில் ஏற்றி தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. இங்கு அம்மனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளது. கொல்லங்கோடு கண்ணனாகத்தில் இருந்து மேற்கு நோக்கி 500 மீட்டர் தொலைவில் உள்ள வட்டவிளையில் மூலஸ்தான கோவில் அமைந்து உள்ளது.


கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி 500 மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழாக் கோவில் அமைந்து உள்ளது. குழந்தைகளுக்கான தூக்கத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் இக்கோவில் நடக்கும். தூக்கத் திருவிழாவையொட்டி நேற்று அதிகலை பள்ளி உணர்த்தல், மஹாகணபதி ஹோமம், கொடிமரம் மேளதாளத்துடன் வெங்கஞ்சி கோவிலுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாலை 3 மணிக்கு மூலகோவிலில் இருந்து மீண்டும் எழுந்தருளி கண்ணனாகம் சந்திப்பு வழியாக ஸ்ரீதேவி மகளிர் பள்ளி, கீழவீடு நாகராஜா காவு, இளம்பாலமுக்கு மஹாதேவர் கோவில் ஆகிய இடங்களில் இறக்கி பூஜைகளுக்கு பின் இரவு 7.30 மணிக்கு வெங்கஞ்சி திருவிழா கோவில் வந்தடைந்தது. 7.50க்கு திருக்கொடி ஏற்று நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி கொடி ஏற்றினார். துவக்க நிக­ழ்ச்சி கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர் தலைமையில் நடந்தது. ஈரோடு ஸ்ரீகந்த பாரம்பரிய சூரியனார் சேத்ர ஆதீனம் ஸ்ரீகாரியம் வாமதேவ ஸ்ரீமத் ஷிவாங்கர சேசிக சுவாமிகள் ஆசி வழங்கினார். எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், கொல்லங்கோடு நகராட்சி சேர்மன் ராணி ஸ்டீபன் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், இணைச் செயலாளர் பிஜூகுமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar