Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைவலி தீர்க்கும் வலம்புரி விநாயகர் ... சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு: நந்தீஸ்வரருக்கு 18 வகை அபிஷேகம் சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சிறப்பு பஸ்கள் போக்குவரத்து துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2023
18:37

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கத்திற்கு முன்னரே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சிறப்பு பஸ்கள் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ந் தேதியும்,மின் அலங்கார தேர்பவனி 6ந் தேதி இரவும் நடைபெற உள்ளது.இந்த விழாவிற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.இந்நிலையில் பங்குனி மாதம் பிறந்து 4 நாள்கள் ஆனதை தொடர்ந்து பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தொடர்ந்து மதுரை,அருப்புக்கோட்டை ,விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கடந்த 3 நாட்களாக தாயமங்கலத்திற்கு சென்று வருகிறது. பொங்கல் விழா கொடியேற்றத்திற்கு பிறகு ஏராளமான ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். ... மேலும்
 
temple news
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ... மேலும்
 
temple news
தவறுதலாக ஒரு எழுத்தை பேப்பரில் எழுதினால் அதை ரப்பரால் அழிக்க முடியும். பலருக்கு நினைத்த செயல் ... மேலும்
 
temple news
ஜம்மு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு  முழுவதும் உள்ள சீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்காக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை (3ம் தேதி) காலை, 10:54 மணிக்கு தொடங்கி, 4ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar