கோவை: ஒத்தக்கால் மண்டபம் அருள்தரும் அன்னை மகாலட்சுமி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி முதல்நாள் நிகழ்வு தொடங்கியது. 25ம் தேதி முதல் காலவேள்வி, 26ம் தேதி இரண்டாம் நாள் காலவேள்வி நடந்தது. தொடர்ந்து இன்று 27ம் தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளாக பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.