Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழக்கோவில்பட்டி பகவதி அம்மன் ... பரமக்குடி வட்டார முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம் பரமக்குடி வட்டார முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
06:04

அவிநாசி: அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மாவிளக்கு எடுத்த ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அவிநாசி, வேலாயுதம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர் .அதனைத் தொடர்ந்து, மஹா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, பொங்கல் வைத்தல், மெரமனை எடுத்தல், சேற்று வேஷம் நடனம்,கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, கடந்த மாதம் 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டுதல், கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. அதன் பின்னர் 30ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் பூச்சட்டி எடுத்து ஆடுதல், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல்,கரகம் எடுத்தல் நடைபெற்றது. பூச்சாட்டு விழாவில் நாளை அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து மஹா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வருதல், பம்பை உடுக்கையுடன் பெண்கள் மஞ்சள் நீர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி உள்ளது.மாலையில் மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar