பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு விழா சிறப்பு வழிபாடு நடந்தது. டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், எட்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சுதர்சன ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.