பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 71 லட்சம் கிடைத்தது.
பழநி கோயிலில் ஏப்.11,12 ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஏப்.12ல் காணிக்கையாக 249 கிராம் தங்கமும், 4,466 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. ஒரு கோடியே 87 லட்சத்து 44 ஆயிரத்து 384, மற்றும் 300 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 1,098 கிராம் தங்கமும், 18 ஆயிரத்து 622 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.4 கோடியே 71 லட்சத்து 78 ஆயிரத்து 703, மற்றும் 810 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.