தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 11:04
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தாடிக்கொம்பு, திண்டுக்கல், வேடசந்தூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.